கொழும்பில் தெரு நாய்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தெரு நாய்களை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது
இந்த போராட்டத்தில் விலங்கு ஆர்வலர்கள் குழு ஒன்று கலந்து கொண்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் கொழும்பில் இருந்து தெரு நாய்கள் அகற்றப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.