நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்
குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (24) நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை கலைப்பு தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.