அஜித் தோவல் மற்றும் கௌதம் அதானியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்தியா விஜயத்தின் போது, இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியையும் சந்தித்து பேசியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (21) காலை டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்தியா விஜயத்தின் போது, இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியையும் சந்தித்து பேசியுள்ளார்.