'ஒரு தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் தொலைபேசி எண்ணுக்கு QR குறியீட்டு முறையில் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்'
புதிய கொள்கை முடிவின்படி, ஒவ்வொரு தேசிய அடையாள அட்டை (NIC) எண் மற்றும் தொலைபேசி எண்ணின் கீழும் QR குறியீட்டு முறை மூலம் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று (17) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க இதனைக் கூறினார்.
‘‘ஒரு தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் ஒரு அலைபேசி எண்ணுக்கு ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தக் கொள்கை முதன்முதலில் செயல்படுத்தப்பட்டபோது, வாகனங்களை மாற்றிய அல்லது கைமாற்றிய பலரால் அவற்றைப் பதிவு செய்ய முடியவில்லை.
‘‘ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக இந்த நேரத்தில் நாங்கள் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். பல வாகனங்களை வைத்திருக்கும் தனிநபர்களுக்காக, வணிகப் பதிவு (BR - Business Registration) என்ற தனிப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
‘‘தற்போதைய தேசிய நெருக்கடியில், ஒரு தனி நபர் இரண்டு அல்லது மூன்று வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்’’ என்று அவர் கூறினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.