நாடளாவிய ரீதியில் நாளை முதல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் தபால் திணைக்களத்துக்கு இன்று (02) வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் தபால் திணைக்களத்துக்கு இன்று (02) வழங்கப்படவுள்ளன.
அதன்பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் திணைக்களம் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது திணைக்களத்துக்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்தை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.