ஆணின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை
புத்தளம் - கல்லடி நெழும்வெவ பகுதியில் நேற்று இரவு (11) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் - கல்லடி நெழும்வெவ பகுதியில் நேற்று இரவு (11) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிலாபம் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கல்லடி பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று, சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் புத்தளம் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.