கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு பயணத்தடையை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், இன்று (01) விதித்துள்ளது.
அத்துடன், அவரை நாளை (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் நடைபெற்ற தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.