புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் குறித்து வெளியான தகவல்!

அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 26, 2023 - 12:08
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் குறித்து வெளியான தகவல்!

நேற்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கியதுடன், அந்த காலம் முடிவடைந்த பின்னர், ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு மேலும் 3 மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சாதாரணத்தர பெறுபேறு வெளியீட்டு திகதி குறித்து புதிய அறிவிப்பு இதோ!

தொடர்ந்து மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீட்டிப்பு கடந்த அக்டோபர் 13 அன்று வழங்கப்பட்டதுடன், விக்கிரமரத்னவுக்கு நான்காவது சேவை நீடிப்பு நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (24ஆம் திகதி) வரை அமுலுக்கு வந்தது.

அதன்படி நான்காவது பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் பொலிஸ் மா அதிபருக்கான பதவி வெற்றிடமாக உள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  "பொலிஸ் மா அதிபரின் பணி நீட்டிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. புதிய நியமனம் அல்லது பணி நீட்டிப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை." என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!