10,000 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்
பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய சுமார் 9,417 பொலிஸ் அதிகாரிகளுக்கு அடுத்த தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்த யோசனைக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு பதவி உயர்வு பெறும் பொலிஸ் அதிகாரிகளில் 8,312 ஆண்களும், 1,005 பெண்களும் உட்பட சாதாரண பதவியில் உள்ளவர்கள் முதல் அதி உயர் பதவியில் உள்ளவர்கள் வரை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.