உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சையில் மாற்றம்... வெளியான அறிவிப்பு
சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024 மே - ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது.
அத்துடன், உயர்தரப் பரீட்சை 2024 டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சை நடைபெறும் திகதிகள் மற்றும் கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.