எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என வெளியான தகவல்களின் உண்மைத்தன்மை இல்லை என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1, 2024 - 11:06
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என வெளியான தகவல்களின் உண்மைத்தன்மை இல்லை என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது எந்த பிரதேசத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!