நாட்டில் இன்று சீரான வானிலை
நாட்டில் இன்று (07) மழையற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று (07) மழையற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.