இன்றும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் 100 மில்லிமீட்டருக்கும் அதிக கனமழை

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மே 16, 2024 - 11:07
மே 16, 2024 - 11:08
இன்றும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் 100 மில்லிமீட்டருக்கும் அதிக கனமழை

நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்வதால், நாடு முழுவதும் மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!