இன்று (26) நாட்டின் பல பகுதிகளில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறின்படி, இன்று (26) மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
இன்று (26) நாட்டின் பல பகுதிகளில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் இன்று (26) பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மழை மற்றும் காற்று காரணமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் தங்குவது நல்லது. திறந்த வெளிப் பகுதிகளிலும், மரங்களின் அருகிலும் இருப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -