சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீடு நாளை ஆரம்பம்

இந்த விடைத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் 30, 2025 - 15:52
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீடு நாளை ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் (01) முதல் தொடங்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடைத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த பணிகளில் சுமார் 16,000 ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!