கனடா வேலைவாய்ப்பு ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி – நபர் கைது

கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடம் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கனடா வேலைவாய்ப்பு ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி – நபர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குச்சவெளி பகுதியைச் சேர்ந்த இந்த நபர், இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு கனடா வேலைவாய்ப்பு எனும் ஆசையைக் காட்டி 10 மில்லியன் ரூபாவுக்கும் (ஒரு கோடிக்கும்) அதிகமான தொகையை மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த இவர், கடந்த 19ஆம் திகதியன்று குச்சவெளியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். கைதானவருக்கு எதிராக நீர்கொழும்பு, மட்டக்களப்பு, அவிசாவளை நீதிமன்றங்களில் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கைதானவர் மே 20ஆம் திகதியன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவரை மே 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்குத் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு காவல்துறையினருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டபூர்வமான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குப் பணியகத்தின் அனுமதி மற்றும் சரியான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்றும், அதிகத் தொகையை முன்பணமாகக் கோரும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -