அஸ்வெசும தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படும் நடவடிக்கை 

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.

ஜனவரி 21, 2025 - 11:15
அஸ்வெசும தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படும் நடவடிக்கை 

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.

குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தில் தற்போது 1.72 மில்லியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!