ஹட்டன் ரயில் நிலையத்தில் திடீரென உயிரிழந்த பயணி
ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பி.எஸ்.ஆறுமுகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயில் ஹட்டன் நிலையத்திற்கு வரும் வரை ஓய்வெடுக்கும் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.