ட்ரோன் பயன்பாடு குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

இந்த நடைமுறை நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 30, 2024 - 10:26
ட்ரோன் பயன்பாடு குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை வீடியோ எடுப்பதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!