அரச ஊழியர்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

செப்டெம்பர் 10, 2024 - 11:17
அரச ஊழியர்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்கள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி பணிக்கு வரவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பொதுச் சேவை ஆணைக்குழு கூறுகிறது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தமக்கு அறிவிக்காமல் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!