ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது, ​​அதிகாரிகளின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது, ​​அதிகாரிகளின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, விருப்பு வாக்குகளை எண்ணும் நிகழ்வைக் காண தமது கட்சி உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

"வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் கட்சிப் பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள், ​​அந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மற்ற அனைத்து அதிகாரிகளைப் போலவே, அவர்களும் நீண்ட செயல்முறை முழுவதும் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தான்  வழங்கப்படுகின்றது" என ரத்நாயக்க கூறினார்.

"தேர்தல் அதிகாரிகளை நடத்துவது எங்கள் அதிகாரிகளின் பொறுப்பு என்றாலும், கட்சி பிரதிநிதிகளை நடத்துவது அந்தந்த அரசியல் கட்சியிடம் உள்ளது," என்று அவர் விளக்கினார்.

விருப்பு வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​ஒவ்வொரு நபரின் பிரசன்னத்தையும் விசாரிப்பது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பல்ல என ரத்நாயக்க தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

"ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், தேவையற்ற நபர்கள் இருந்தால், அந்த நபர்களை நாங்கள் வளாகத்திலிருந்து அகற்றியிருப்போம்," என்று அவர் கூறினார்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது விருப்பு வாக்குகளை எண்ணுவது தொடர்பாக சட்டரீதியான குழறுபடிகள் ஏற்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்திய கூறி இருந்தது.

விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லை என அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 

(நியூஸ்21)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT