வீசா கட்டணம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் இதோ!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வீசா வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வீசா கட்டணம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் இதோ!

இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு 30 நாள் வீசாவுக்கு தற்போது அறவிடப்படும் 50 அமெரிக்க டொலர் கட்டணத்தை தொடர்ந்தும் தக்கவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளின் குடிமக்களுக்கு இலங்கை தொடர்ந்து இலவச விசா சேவைகளை வழங்கும்.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வீசா வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர