சபைக்குள் இனி இதனை செய்ய தடை... சபாநாயகர் அதிரடி அறிவிப்பு
சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து முற்பகல் 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை முற்பகல் 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற சபைக்குள் இருந்து, திறன்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக, சபை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களில் நேரலை செய்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து முற்பகல் 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை முற்பகல் 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைக் கூறினார்.