போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்
பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(21) அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாகனத்தில் விஜபி விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறு செய்யதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.
இதனால், பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட நிலையில், அந்த ஆவணங்களை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளார்.