நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, இருவர் மாயம்
காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நீர்கொழும்பு கடற்கரைக்கு அப்பால் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதே கடல் பகுதியில் மேலும் பல மீன்பிடிப் படகுகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் படகுகளில் உள்ளவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக மீட்புப் பணிகளை பாதுகாப்புத் தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர