தேர்தல் பிரசார நடவடிக்கை 3 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

மே 3 ஆம் திகதியில் இருந்து தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதி காலமாக அறிவிக்கப்படும்.
தேர்தல் பிரசார நடவடிக்கை 3 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் மே 3 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு முடிவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, மே 3 ஆம் திகதியில் இருந்து தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதி காலமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, வீடு வீடாகச் சென்று வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளைப் பெறாத எவரும் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குப் பிறகு தங்கள் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அந்த வாக்குச் சீட்டுகளைப் பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அஞ்சல் துறைக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளில் 94% க்கும் அதிகமானவை இதுவரை விநியோகிக்கப்பட்டதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -