வெள்ளவத்தையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளவத்தையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தை காலி வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (13) பிற்பகல் கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர