தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
ஹோமாகம, மீகொட பகுதியில் வெசாக் தானசாலை ஒன்றின் அருகே கூட்டத்தினரின் மீது வாகனம் மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மீகொட சந்தி பகுதியில் உள்ள வெசாக் தானசாலை அருகே, வீதியில் சென்றுகொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற காரின் சாரதி, பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்து ஹோமாகமஅடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலை தரப்பு தகவல்களின்படி, அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பின்னர் தப்பிச் சென்ற நிலையில், இந்த கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.