மட்டக்களப்பு கடற்பரப்பில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இன்று அதிகாலை 01.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை (11) இலங்கையின் வடகிழக்கு கடற்பகுதியில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று அதிகாலை 01.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.