2026 க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் கோரல் – காலக்கெடு நீடிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
2026 க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் கோரல் – காலக்கெடு நீடிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E Ordinary Level) பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையவழி (Online) மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, ஜூலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை மட்டுமே அமலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், பாடசாலை விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது பாடசாலை அதிபர் ஊடாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, தனிப்பட்ட (Private) விண்ணப்பதாரர்கள் திணைக்களம் வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக இணையத்தின் மூலம் தாமாகவே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்களை பயன்படுத்துவது கட்டாயமாகும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை விவரங்களை பயன்படுத்தி, பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ அல்லது https://www.onlineexams.lk/eic என்ற இணைய முகவரிகளுக்குச் சென்று, தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

அதேவேளை, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நாள் ஜூலை 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்றும், அதற்குப் பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -