2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 2,723 பரீட்சை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.