மன்னார் போக்குவரத்து சபை சாரதிகள் பணி புறக்கணிப்பு
மன்னார் அரச போக்குவரத்து சாரதிகள் இன்றுபணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் அரச போக்குவரத்து சாரதிகள் இன்றுபணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரச போக்குவரத்து பேருந்து சாரதி ஒருவரை தனியார் பேரூந்து சாரதி கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படும் நிலையில் குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறியும், தாக்குதலை மேற்கொண்ட சாரதிக்கு உடனடியாக பிணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று யாழ்ப்பாணத்திலும் இன்று வடமாகாணம் முழுவதும் அரச போக்குவரத்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.