இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - வெளியான தகவல்
இவ்வருடம் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை 904,318 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வருகை தந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 719,978 ஆக உள்ளது.
எனினும், இந்த வருடத்தில் கடந்த எட்டு மாதங்களிலேயே அதிகரிப்பை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.