இன்றைய வானிலை - சில நேரங்களில் மழை பெய்யும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும்.

இன்றைய வானிலை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும். தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை பெய்யாது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது கி.மீ. 40-45 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.