பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடையவுள்ளன.
அத்துடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.