எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களுக்கு வாரம் தோறும் ஒரு நாள் விடுமுறை

இலங்கையில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை கருத்தில் கொண்டு அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களுக்கு வாரம் தோறும் ஒரு நாள் விடுமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் தொடர்ந்தும் நிலவி வரும் எரிபொருள் விநியோக சிக்கலை சமாளிக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரச ஊழியர்களுக்கு வாரம் தோறும் புதன்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 17ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து மற்றும் பணிநேரங்களில் பல்வேறு சிக்கல்கள் உருவாகி வரும் நிலையில், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவது மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த முடிவு தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமைக்கேற்ப அடுத்தடுத்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT