அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு : ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? வெளியான தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நவம்பர் 14, 2023 - 21:42
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு : ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? வெளியான தகவல்!

அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியிடம் வரவு -  செலவு திட்டத்தை புகழ்ந்து விட்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் வரவு - செலவுத் திட்டத்தை விமர்சிப்பது முறையற்றது. நாடு தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த ஒருவருட காலமாக அரசியல் நோக்கமில்லாமல் தீர்மானங்கள் எடுத்ததால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது.

அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் ஏதும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!