பாடசாலை போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு; இன்று (10) முதல் நடைமுறை
டீசல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் எரிபொருள் விலைகள் பல முறை திருத்தப்பட்டிருந்தாலும் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு போக்குவரத்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என கூறினார்.
எனினும் தற்போது டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணத்தில் 5 சதவீத உயர்வு அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய கட்டண உயர்வு இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.