அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

கிராம உத்தியோகத்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 19, 2024 - 23:01
டிசம்பர் 20, 2024 - 00:29
அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

அடையாள அட்டை இன்றி வங்கியில் முடக்கப்பட்ட அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதில் மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், கொடுப்பனவுகளை வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக பிரதேச, கிராம உத்தியோகத்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக கொடுப்பனவுகளை பெற்று கொள்ள முடியும் என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்மைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!