இடியுடன் கூடிய மழை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் 19, 2024 - 11:30
இடியுடன் கூடிய மழை தொடர்பில் வெளியான தகவல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (19) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!