தந்தையை கடுமையாக தாக்கிய பொலிஸ் சார்ஜன்டான மகள் கைது
தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காலி அஹுங்கல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காலி அஹுங்கல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணித் தகராறு தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து, பொலிஸ் சார்ஜன்டான தனது மகள் தன்னைத் தாக்கினார் என்று அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது பேருவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முறைப்பாட்டின் பிரகாரம், இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றும், இதையடுத்து பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.