தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

தகவல்கள் தெரிந்தால் சி.ஐ.டி.க்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மார்ச் 6, 2025 - 17:23
தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கைது செய்வதற்காக தேடப்படும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான தகவலை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இன்று ( 06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

தென்னகோனைக் கண்டுபிடிக்கும் பணி குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் சி.ஐ.டி.க்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!