சுற்றுலாத்தளமாக மாறும் நந்திக்கடல்!
இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் கரையோரப் பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களைக் கண்டறிந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் அவற்றை சுற்றுலாத் தளங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கரையோரப் பகுதிகளில் 24 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் நந்திக்கடல் கடற்பகுதியும் உள்ளடங்கியுள்ளது.
அதேவேளை உப்புவெளி, சாம்பல் தீவு மற்றும் நாயாறு ஆகிய கடற்கரைப் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.