இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை அதிகரிப்பு
இன்று (மே 20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பே இந்த முடிவுக்குக் காரணம் என்று சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்தார்.
இதற்கிடையில், பால்மா இறக்குமதியாளர்கள் சங்கமும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால்மா பெட்டியின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பெட்டியின் விலை 125 ரூபாவினாலும் உயர்த்தப்படுகிறது.
சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று விகித நிலவரத்தைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் புதிய விலைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் புதிய விலைகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களே சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும், தற்போது சந்தையில் உள்ள ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை எந்த விதத்திலும் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
