சீரற்ற வானிலையால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, களுத்துறை, காலி, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுகே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.