மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 02 கட்டங்களாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, ரத்தோட்டை, வில்கமுவ மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளும் 01 கட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கை நாளை (21) இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.