மின்னல் தாக்கி யாழ்ப்பாண இளைஞன் பலி!
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். சுழிபுரத்தை சேர்ந்த இளைஞன் நேற்று வியாழக்கிழமை (14) வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
