பேருந்துகளில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய நடைமுறை; அதிரடி அறிப்பு

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜுன் 17, 2025 - 11:35
ஜுன் 17, 2025 - 11:52
பேருந்துகளில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய நடைமுறை; அதிரடி அறிப்பு

பேருந்து பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் கண்காணிப்பு பயணத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!