இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அறிவிப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் 2023 செப்டம்பர் 02-03 அன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்.

செப்டெம்பர் 1, 2023 - 20:24
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அறிவிப்பு

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் 2023 செப்டம்பர் 02-03 அன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்.

இந்த விஜயத்தின் போது ஸ்ரீ ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளின் முழு வரம்பும் மீளாய்வு செய்யப்படும். அத்துடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் நுவரெலியா மற்றும் திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

ஸ்ரீ ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவை ஆழப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கிய அடையாளமாக இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது. (நியூஸ்21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!