வறுத்த கோழி  வாங்க பணம் தராததால் மனைவியை குத்திக் கொன்ற கணவன்

பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

நவம்பர் 26, 2023 - 12:29
நவம்பர் 26, 2023 - 12:29
வறுத்த கோழி  வாங்க பணம் தராததால் மனைவியை குத்திக் கொன்ற கணவன்

உத்தரப் பிரதேசத்தில் 'வறுத்த கோழி' (Fried Chicken) வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த கணவன் கத்தரிக்கோலால் மனைவியை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் உள்ள பிரேம் நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித் ஹுசைன். அவர் தையல்காரராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி நூர் பானோ (46 வயது). 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஹுசைன், சந்தையில் இருந்து வறுத்த கோழி வாங்குவதற்காக பானோவிடம் பணம் கேட்டுள்ளார். பானோ பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விசாவில் இருந்து விலக்கு அளித்த சீனா... எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?

பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு பானோ, வெளியே சென்று சிக்கன் வாங்கி வந்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹுசைன், கத்தரிக்கோலால் பானோவின் கழுத்தில் குத்தியுள்ளார். 

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானோ, அங்கு உயிரிழந்தார். அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!